News April 15, 2025
தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு வார விழா

அருப்புக்கோட்டை தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் தீ தொண்டு வார விழா அனுசரிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையில் தீ தொண்டு வார விழாவின் ஒரு பகுதியாக நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த வாரம் முழுவதும் தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தீயணைப்பு நிலைய அலுவலர் இன்று தெரிவித்தார்.
Similar News
News November 8, 2025
விருதுநகர்: பாலியல் குற்றவாளி மீது குண்டாஸ்

விருதுநகரில் எஸ்.எஸ் மாணிக்கம் நகரை சேர்ந்த சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த திருச்சுழி சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த முருகன் (29) மீது மேற்கு போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவர் இதுபோன்ற குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடாமல் இருப்பதை தடுக்க எஸ்.பி கண்ணன் பரிந்துரை பெயரில் ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவின் குண்டர் தடுப்பு சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
News November 8, 2025
விருதுநகர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வழி

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News November 8, 2025
ஸ்ரீவி.: போலீசை கத்தியால் குத்தி குற்றவாளி தப்ப முயற்சி

சிவகாசி வடபட்டியை சேர்ந்தவர் மரியராஜ் (28). இவர் மீது பெண்கள் வன்கொடுமை புகார் தொடர்பாக ஸ்ரீவி. மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. இது தொடர்பாக மரியராஜை கைது செய்து அழைத்து சிவகாசி அருகே வருகையில் அவர், கத்தியால் போலீசார் வினோத்குமாரின் கையில் குத்திவிட்டு, தானது கழுத்தில் அறுத்துக்கொண்டு தப்ப முயற்சித்துள்ளார். இதில் காயமடைந்த இருவரும் ஸ்ரீவி. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.


