News April 29, 2025
தீமைக்கு எதிராய் போராடுங்கள்

கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் பொதுமக்கள் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாடு குறித்து 24/7 செயல்படும் Whats app எண்ணிற்கு 63690 28922 தொடர்ப்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். மேலும், DRUG FREE TN என்ற செயலி மூலமாகவும் புகார் அளிக்கலாமென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க மக்களே!
Similar News
News December 22, 2025
கிருஷ்ணகிரியில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு!

கிருஷ்ணகிரி அம்மன் நகரில், தனியாக இருந்த லாரி டிரைவர் மனைவி விஜயலட்சுமியிடம் 51, முகமூடி அணிந்த மர்ம நபர் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார். விஜயலட்சுமி கூச்சலிடுவதற்குள் அந்த நபர் தப்பியோடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
News December 22, 2025
கிருஷ்ணகிரி: தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கல்

தமிழக முதல் அமைச்சரின் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் டிச-20 கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் 70 தூய்மை பணியாளர்களுக்கு சோதனை அடிப்படையில் காலை சிற்றுண்டி உணவு தயார் செய்யப்பட்டு பணிகளை செய்து வந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கி, காலை சிற்றுண்டியை வழங்கினார்.
News December 22, 2025
கிருஷ்ணகிரியில் குறைதீர்க்கும் முகாம் துவக்கம்!

கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் வளாகத்திலுள்ள, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (டிச.22) முதல் ஜனவரி.3ம் தேதி வரை சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வு காலை 10மணி – மாலை 6மணி வரை நடைபெறும். மேலும், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு வாடிக்கையாளர்களின் புகார்கள் சந்தேகங்களுக்கு இந்த முகாமினை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!


