News October 24, 2024
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு வரும் 30 ஆம் தேதி மற்றும் நவம்பர் 6 ஆம் தேதி இரவு 7 மணியளவில் சென்னையில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் ரயில் எண் 06005 அரக்கோணம் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகாசி, சங்கரன்கோவில் வழியாக சென்று அடையும். இதேபோல் மறு மார்க்கத்தில் வரும் 31 மற்றும் நவம்பர் 7 ஆம் ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
திருப்பத்தூர்: லஞ்ச ஒழிப்புத் துறையின் விழிப்புணர்வு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் லஞ்சமில்லா, வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்க வலியுறுத்தி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இது குறித்த புகார்களை www.dvac.tn.gov.in என்ற வலைதளம், dsptptdvac.tnpol@gov.in என்ற மின்னஞ்சல் அல்லது 9445048973 என்ற தொலைபேசி எண் மூலமாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 13, 2025
திருப்பத்தூர்:ரூ.56,900 சம்பளத்தில் வேலை! APPLY NOW

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு நாளை டிச.14ம் தேதிக்குள் இந்த <
News December 13, 2025
திருப்பத்தூர்: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.இதை SHARE பண்ணுங்க


