News October 24, 2024

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

image

தீபாவளி பண்டிகை முன்னிட்டு வரும் 30 ஆம் தேதி மற்றும் நவம்பர் 6 ஆம் தேதி இரவு 7 மணியளவில் சென்னையில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் ரயில் எண் 06005 அரக்கோணம் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகாசி, சங்கரன்கோவில் வழியாக சென்று அடையும். இதேபோல் மறு மார்க்கத்தில் வரும் 31 மற்றும் நவம்பர் 7 ஆம் ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News

News August 13, 2025

பொது இடத்தில் பிறந்த நாள் விழா – வாலிபர் கைது

image

ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி இவரது மகன் நவீன் குமார் என்பவர் கடந்த 10 ம் தேதி அதே பகுதியில் பொது இடத்தில் பொது மக்களுக்கு இடையூறாக பிறந்த நாள் விழா முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினார். இது குறித்து தீர்த்தகிரி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து நவீன்குமார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News August 12, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று(ஆக.10) இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ள காவலர்களின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்கு அவர்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காவல்துறை உதவி தேவைப்படும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கோ, அல்லது 100-க்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

News August 12, 2025

மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு பதிவு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஆணைக்கிணங்க போக்குவரத்து துறையின் விழிப்புணர்வு பதிவு கார் மற்றும் பேருந்தில் பயணம் செய்யும் போது தலை மற்றும் கையை வெளியில் நீட்ட வேண்டாம். முக்கியமாக குழந்தைகளை அழைத்து செல்லும் போது மிக கவனமாக அழைத்துச் செல்லவும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்புடன் கவனத்துடனும் பார்த்துக்கொள்ள வேண்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

error: Content is protected !!