News October 24, 2024
தீபாவளி: கோவையில் இரவு 1 மணி வரை அனுமதி

கோவை மாநகர காவல் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் கோவையில் தீபாவளி வியாபாரம் களைகட்டியுள்ளது. இதனால் தீபாவளியையொட்டி கோவை மாநகரில் நள்ளிரவு 1 மணி வரை கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்ய போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
Similar News
News October 18, 2025
கோவைக்கு ஆரஞ்ச் அலார்ட்: மக்களே உஷார்!

தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், கோவை மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று கோவை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் ஆலார்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
News October 18, 2025
கோவை: கிராம ஊராட்சி செயலாளர் வேலை! அரிய வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 முதல் 50400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!
News October 18, 2025
தூய்மை பணியாளர்களுக்கும் லீவு விடுங்க

தீபாவளியை முன்னிட்டு அரசு பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்க பட்டுள்ளதுடன், தமிழக அரசு தீபாவளிக்கு அடுத்த நாளும் அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கோவை லேபர் யூனியன் ஏஐடியூசி செயலாளர் என்.செல்வராஜ் தீபாவளிக்கு அடுத்த நாள் தூய்மை பணியாளர்களுக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் மனு ஒன்றை இன்று அளித்துள்ளார்.