News October 24, 2024
தீபாவளி: கோவையில் இரவு 1 மணி வரை அனுமதி

கோவை மாநகர காவல் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் கோவையில் தீபாவளி வியாபாரம் களைகட்டியுள்ளது. இதனால் தீபாவளியையொட்டி கோவை மாநகரில் நள்ளிரவு 1 மணி வரை கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்ய போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
Similar News
News November 17, 2025
கோவை பெண்கள் பாதுகாப்புக்கு 7 பிங்க் ரோந்து வாகனங்கள்!

புலியகுளம் மகளிர் கல்லூரியில் கோவையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 7 பிங்க் ரோந்து வாகனங்கள் காவல் ஆணையர் சரவண சுந்தர் தொடங்கி வைத்தார். சிங்காநல்லூர், காட்டூர், சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் இவை 24 மணி நேர ரோந்தில் ஈடுபடும். மேலும் 4 இடங்களில் சகோ தூண்கள் நிறுவப்பட்டு, எஸ்.ஓ.எஸ் மூலம் உடனடி போலீஸ் உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 17, 2025
கோவை ஆசிரியர் தகுதி தேர்வில் 1526 பேர் ஆப்சென்ட்!

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு(TET)நேற்று, இன்று என இரு தினங்கள் நடைபெற்றது. அதன்படி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – 2 தேர்விற்கு 12,370 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 10,844 பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். மீதமுள்ள 1526 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
News November 16, 2025
மோடி வருகை: கோவையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 19.11.2025 புதன்கிழமை கோவை வருகை புரிவதை முன்னிட்டு, நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை கோவையில் போக்குவரத்து மாற்றம் அமல். அதன்படி, அவினாசி ரோடு, ஜி.டி.நாயுடு மேம்பாலம் உள்ளிட்ட சாலைகள் தற்காலிகமாக மூடப்படும். கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைவு தடை, விமான நிலையத்தில் வாகன நிறுத்தம் தடை. பொதுமக்கள் மாற்றுப்பாதை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


