News March 28, 2024
தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் எதிரில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அடுத்த பெருமணம் கிராமத்தில் கூட்டத்திற்கான ஆலோசனை மற்றும் அழைப்பிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு திமுக உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
Similar News
News August 9, 2025
தி.மலை ஆட்சியர் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார்

தி.லை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் தலைமையில் (ஆகஸ்ட்-08) நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்ட வங்கியாளர்களுடன் ஆலோசனைக் குழு கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தின் நடப்பு நிதி ஆண்டிற்கான 2025 – 2026 வருடாந்திர கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
News August 8, 2025
தி.மலை மழையின் அளவு அட்டவணையாக வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (7-08-25 )ஜமுனாமரத்தூர், வெம்பாக்கம் ஆரணி ,சேத்பட் ,செய்யார், கீழ்பென்னாத்தூர்,செங்கம், வந்தவாசி பகுதிகளில் பரவலாக பெய்த மழையின் மி, மீட்டர் அளவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது மழை இராணிப்பேட்டை ஆற்காடு பகுதிகளில் பெய்து கொண்டிருக்கிறது இரவு 10 மணிக்கு மேல் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 8, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (08.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.