News March 26, 2025

தி.மலை மாவட்டத்தில் 2025-2026ம் ஆண்டில் 5000 வீடுகள் ஒதுக்கீடு

image

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடையும் வகையில் வரும் 2030 ஆண்டிற்குள் தமிழகத்தில் ஊரக பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தர திட்டமிடப்பட்டுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-2026ம் ஆண்டில் 5000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News October 31, 2025

தி.மலை: அண்ணாமலையார் கோயில் முக்கிய அறிவிப்பு

image

தி.மலை அருணாசலேசுவரர் கோயிலில் நவ.4-ம் தேதியன்று அன்னாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அன்று பிற்பகல் 3 மணி-மாலை 6 மணி வரை நடை சாற்றப்பட்டு பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்படும். மாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு தரிசன அனுமதி வழங்கப்படும். அதிகளவில் பக்தர்கள் வருகைபுரிவதால், 4 மற்றும் 5-ம் தேதிகளில் முன்னுரிமை தரிசனம் வழங்கப்படமாட்டாது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளார்.

News October 31, 2025

தி.மலை: இன்று இதை மிஸ் பண்ண வேண்டாம்!

image

தி.மலை மாவட்டத்தில் இன்று (அக்.31) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற உள்ளன அதன்படி, விபிஎஸ்சி கட்டிடம்-மேல்கச்சிராப்பட்டு, எம்ஆர்வி மஹால்-தச்சூர், ஊராட்சிமன்ற அலுவலகம் அருகில்-கடம்பை, விபிஆர்சி கட்டிடம்-செய்யாற்றை வென்றான், ரஜினி மஹால்- காந்தபாளையம், ஆர்.ஒய்.எப் மண்டபம்- ஆவூர் ஆகிய இடங்களில் நடைபெறும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 30, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (30.10.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!