News November 25, 2024

தி.மலை: மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. முகாமுக்கு, மருத்துவச் சான்றிதழுடன் கூடிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் 4 ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

Similar News

News October 17, 2025

தி.மலை: மின்னல் தாக்கி இளைஞர் பலி!

image

ஆரணி அருகே சென்னாத்தூர் லாடவரம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் ஏழுமலை (22). நேற்று வயலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, மழை பெய்ததால் மரத்தடியில் ஒதுங்கி உள்ளார். இந்த நிலையில், இடி தாக்கி ஏழுமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News October 17, 2025

தி.மலை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!

image

தி.மலை மாவட்டத்தில் இன்று (அக்.17) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற உள்ளன. தி.மலை எஸ்.கே.பி இன்ஜினியரிங் கல்லூரி, வந்தவாசி-முத்து குமரன் மண்டபம், சுமங்கலி-வி.பி.ஆர்.சி கட்டிடம், என்.எஸ். செல்வம் மஹால்-கீழ்சீத்தாமங்கலம், சுகன்யா திருமண மண்டபம்-சோ.மண்டப்பட்டி, சேத்துப்பட்டு-ராஜா முருகன் திருமண மண்டபம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News October 17, 2025

திருவண்ணாமலை: ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (அக்.16) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!