News March 24, 2025
தி.மலை: பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்கள் கவனத்திற்கு

தாட்கோ மூலம் பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கான புத்தாக்கப் பொறியாளர் பயிற்சிக்கு www.tahdco.com-ல் பதிவு செய்யலாம் என கலெக்டர் தர்பகராஜ் அறிவித்துள்ளார். 2022–2024 வரை பட்டம் பெற்ற, 21–25 வயதுடைய, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் கீழ் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளைஞர்கள் பயனடையலாம். 18 வார பயிற்சிக்கு தங்கும் வசதியுடன் வேலைவாய்ப்பு வாய்ப்பு வழங்கப்படும்.
Similar News
News September 15, 2025
தி.மலை : BE போதும்..ரூ.80,000 வரை சம்பளம்

திருவண்ணாமலை பட்டதாரிகளே, மத்திய அரசு நிறுவனமான ‘இஞ்ஞினியர்ஸ் இந்தியா’-வில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தேர்வெழுத அவசியம் இல்லை. மாதம் ரூ.72,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 15, 2025
ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், இன்று (15.09.2025) திருவண்ணாமலை மாநகராட்சி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பாக, “அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ்” ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000/- உதவித்தொகை அளிப்பதற்கான ஆணைகளை வழங்கினார். இதில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
News September 15, 2025
வேலைவாய்ப்பு முகாமை ஆய்வு செய்த ஆட்சியர்

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று(செப்.15) நடைபெற்து. இதில் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்கள் சார்பாக இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த முகாமை திருவண்ணாமலை ஆட்சியர் க.தர்ப்பகராஜ் பார்வையிட்டார். இதில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணிவேந்தன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.