News March 24, 2025
தி.மலை: பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்கள் கவனத்திற்கு

தாட்கோ மூலம் பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கான புத்தாக்கப் பொறியாளர் பயிற்சிக்கு www.tahdco.com-ல் பதிவு செய்யலாம் என கலெக்டர் தர்பகராஜ் அறிவித்துள்ளார். 2022–2024 வரை பட்டம் பெற்ற, 21–25 வயதுடைய, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் கீழ் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளைஞர்கள் பயனடையலாம். 18 வார பயிற்சிக்கு தங்கும் வசதியுடன் வேலைவாய்ப்பு வாய்ப்பு வழங்கப்படும்.
Similar News
News November 12, 2025
தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் (11.11.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
தி.மலை: 9 வயது சிறுமியிடம் 72 வயது முதியவர் பாலியல் சீண்டல்

தி.மலை: படவேடு அருகே காளிகாபுரம் கிராமத்தில் 9 வயது சிறுமியிடம், ஜானகிராமன் என்ற 72 வயது முதியவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது குறித்த வழக்கில் ஆரணி மகளிர் காவல் நிலைய போலீசார் இன்று (நவ.11) முதியவர் ஜானகிராமனை போக்சோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
News November 11, 2025
தி.மலை: இளைஞர்களே செம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <


