News March 23, 2024
தி.மலை: சிறுமி கர்ப்பம்: கொடூரம்

செய்யாறு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சின்னராசு என்பவர் 10ஆம் வகுப்பு மாணவியை அடிக்கடி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில், மாணவி கர்ப்பமான நிலையில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் செய்யாறு மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சின்னராசுவை தேடி வருகின்றனர். இவர் 2 குழந்தைக்கு தந்தை என்பதும் மாணவிக்கு சித்தப்பா முறை என்பதும் தெரியவந்துள்ளது.
Similar News
News December 10, 2025
திருவண்ணாமலையில் கூண்டோடு கைது!

தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் திருவண்ணாமலை மாவட்ட மையம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 134 கூண்டோடு கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News December 10, 2025
தி.மலை: 6 வயது சிறுமியின் மனசு ரொம்ப பெருசு♥️

தி.மலை மாவட்டம் ஆரணி டவுன் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடிநாள் தினத்தை முன்னிட்டு ராந்தம் கொரட்டூர் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ- தமிழரசி தம்பதியரின் மகள் 6 வயதான இன்பானசியா, தான் போட்டிகளில் பங்கேற்று பெற்ற பரிசுத்தொகை ரூ.1500 கொடி நாள் நிதியாக வட்டாட்சியர் செந்தில்குமாரிடம் வழங்கினார். இந்த தொகை தேசத்தின் முப்படை வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும். வயது சிறிதானாலும் மனசு பெருசுல. SHARE
News December 10, 2025
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (டிச.9) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


