News April 2, 2025
தி.மலை: எழுத்தாளா் உடல்நலக் குறைவால் காலமானார்

திருவண்ணாமலை காந்தி நகர் புறவழிச் சாலையைச் சோ்ந்த எழுத்தாளா் ந.சண்முகம் (75) உடல்நலக் குறைவால் (ஏப்ரல் 1)நேற்று காலமானாா். இவரது தமிழ்ப் பணியை பாராட்டி தமிழக அரசு அகவை முதிா்ந்த தமிழறிஞா் விருதை வழங்கியது. இவருக்கு மகன் மணிமாறன், மகள் உமாதேவி ஆகியோர் உள்ளனர். ந.சண்முகத்தின் இறுதி சடங்கு திருவண்ணாமலையில் புதன்கிழமை (ஏப்.2) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 30, 2025
தி.மலை: தீக்குளித்த கணவன்-மனைவி அடுத்தடுத்து பலி!

தி.மலை, கடலாடி அருகே கீழ்தாமரைப்பாக்கம் பகுதியை சேர்த்தவர் குமார்-பூங்கொடி தம்பதி. இவர்கள் நிலப்பிரச்னையின் காரணமாக கடந்த நவ.8ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தனர். இவர்களை மீட்ட போலீசார், கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில், நவ.13ஆம் தேதி பூங்கொடி இறந்து விட, சிகிச்சையில் இருந்த குமார் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
News December 30, 2025
தி.மலை: கிணற்றில் சடலமாக மிதந்த விவசாயி!

ஆரணி ராட்டினமங்கலம் அருகேயுள்ள அம்மையப்பட்டு கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் மிதப்பதாக ஆரணி கிராமிய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் விசாரித்த போலீசார், சடலமாக மிதந்தவர் ராட்டினமங்கலம் பகுதியை சேர்ந்த டில்லி (46) என்பது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
News December 30, 2025
தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட அலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி என்னும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.


