News August 24, 2024
தி.மலை அரசு மருத்துவமனைக்கு புதிய ஆம்புலன்ஸ்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் சோஷியல் பவுண்டேஷன் சார்பாக தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.27 இலட்சம் ரூபாய் மதிப்பிலான ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், துணை இயக்குநர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 7, 2025
தி.மலை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 7, 2025
தி.மலை: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.
News November 7, 2025
திருவண்ணாமலை: வெளிநாட்டு வேலையில் பிரச்னையா?

தி.மலை: மாவட்ட மக்களே.., உங்களின் உறவினர்களோ, நண்பர்களோ வெளிநாட்டில் பணிபுரிபவர்களா..? வேலையின்மை, உடல்நலம், சட்டரீதியான பிர்ச்னை போன்ற சிக்கல்களில் அவர்களுக்கு உதவ நமது அரசு சார்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபடி, 8069009900 என்ற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் தந்தால் போதும். இந்தியாவில் இருந்து தொடர்புகொள்ள நினைப்போர் 18003093793-ஐ அணுகலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


