News August 24, 2024
தி.மலை அரசு மருத்துவமனைக்கு புதிய ஆம்புலன்ஸ்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் சோஷியல் பவுண்டேஷன் சார்பாக தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.27 இலட்சம் ரூபாய் மதிப்பிலான ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், துணை இயக்குநர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 27, 2025
தி.மலை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தி.மலை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 27, 2025
தி.மலையில் பயங்கர தீ விபத்து!

திருவண்ணாமலை: காமாட்சி அம்மன் கோயில் தெருவில் உள்ள கற்பூர கடையில் நேற்று(நவ.26) இரவு 10.30 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி அருகிலிருந்த கடைகள் மற்றும் முன் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
News November 27, 2025
தி.மலை: பெண்ணின் சேலையில் பற்றி எரிந்த தீ!

அண்ணாமலையார் கோயிலுக்கு வெளியே கற்பூரம் ஏற்றும் இடத்தில் நேற்று(நவ.26) பெண் ஒருவரின் சேலையில் திடீரென தீப்பற்றி சிறிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து, அவர் சிறுகாயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


