News April 13, 2025
திறனறிவு தேர்வில் 508 பேர் தேர்ச்சி பெற்று மாநில சாதனை

மாநில அளவில் தேசிய வருவாய் வழி திறனறிவு தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. சுமார் 2 லட்சத்து 65 ஆயிரம் பேர் எழுதி, இந்த தேர்வில் மாநில அளவில் 6595பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 508 பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் சாதனை பிடித்துள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பிளஸ் 2 பயிலும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
Similar News
News December 5, 2025
நெல்லை: பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவருக்கு சிறை!

கடந்த 2024ம் ஆண்டு அம்பலவானபுரத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் வயது 77 என்பவர் 12 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதுக்குறித்து அம்பை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பதிந்த போக்சோ வழக்கை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் இன்று விசாரித்து தமிழ்செல்வனுக்கு ஐந்து ஆண்டு சிறை 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
News December 5, 2025
நெல்லை முக்கிய ரயில் சேவை நீட்டிப்பு

நெல்லையில் இருந்து டிசம்பா் 7ம் தேதி முதல் ஜனவரி 25-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்குப் புறப்படும். நெல்லை – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06030) மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மறுமாா்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து டிசம்பா் 8ம் தேதி முதல் ஜனவரி 26ம் தேதி வரை இரவு 7.45 மணிக்குப் புறப்பட்டு ஒரு நாள் காலை 7:45க்கு நெல்லை வரும்.
News December 5, 2025
நெல்லை: 10th தகுதி., மத்திய அரசில் 25487 காலியிடங்கள்! APPLY

நெல்லை மக்களே, மத்திய அரசின் 25487 Constable (GD) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிரம்பிய 10வது தேர்ச்சி பெற்றவர்கள் டிச 31க்குள் <


