News October 12, 2025
திறனறித் தேர்வில் 4912 மாணவர்கள் பங்கேற்பு

தேனி மாவட்டத்தில் 20 மையங்களில் +1 மாணவர்களுக்கான தமிழ் திறனறித் தேர்வு நேற்று (அக்.11) நடைபெற்றது. இந்த தேர்வு எழுத அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 5157 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 4912 பேர் தேர்வு எழுதினர். 245 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. இத்தேர்வில் தகுதி பெறும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு 10,000 வீதம் 2 ஆண்டுகளுக்கு 20,000 வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல்.
Similar News
News December 8, 2025
தேனி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க
News December 8, 2025
தேனி: டீ குடித்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.!

கம்பம் பகுதியை சேர்ந்தவர் ரபீக் ராஜா (21). இவர் அவரது தாயாருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (டிச.7) ரபீக் ராஜா டீ குடித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு.
News December 8, 2025
தேனி: Licence வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.!

தேனி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <


