News May 7, 2024
திறந்தவெளி உணவகங்களில் ஆய்வு

ஏர்வாடி தர்ஹா பகுதியில் உள்ள ஓட்டல்கள், திறந்த வெளி உணவகங்களில் தயாராகும் உணவுகளில் சுவையூட்ட நிறமிகள் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதன்படி உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், ஏர்வாடி தர்ஹா பகுதியில் உள்ள உணவகங்களில் இன்று ஆய்வு செய்தார். 12 கடைகளில் நிறமி பயன்படுத்திய உணவு மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பினார். கடை உரிமையாளர் 4 பேருக்கு நோட்டீஸ் வழங்கி 2 பேருக்கு ரூ.1000 அபராதம் விதித்தார்.
Similar News
News April 20, 2025
தலைமன்னார் தனுஷ்கோடி வரை நீந்தி கடந்த மாற்றுத்திறனாளி பெண்

இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை மாற்றுத்திறனாளி பெண் உட்பட 10 நீந்தி கடந்து வந்தனர். மும்பையை சேர்ந்த ஷஸ்ருதி மற்றும் பாலா கணேஷ் இருவரும் மாற்றுத்திறனாளிகள் நேற்று முன்தினம் காலை தலைமன்னார் கடலில் குதித்து நீந்த துவங்கினர். அவர்களுடன் 8 வீரர்களும் நீந்த துவங்கினர். இதில் மாற்றுத்திறனாளி ஷஸ்ருதி 11 மணிநேரமும், பாலா கணேஷ் 10:30 மணிநேரமும் நீந்தி தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தனர்.
News April 20, 2025
வழிவிடு முருகன் ஆலயத்தில் திரைப்பட பூஜை துவக்கம்

சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி மகன் ஜித்தன் ரமேஷ் நடிக்கும் போர்கள் ஓய்வதில்லை திரைப்பட பூஜை ராமநாதபுரம் வழிவிடு முருகன் ஆலயத்தில் நேற்று காலை நடந்தது. இதில் இருட்டுக்கு கண் இருக்கு உள்பட குறும்பட யூடியூப் நடிகர் மண்டபம் எம் எஸ் ராஜ், அமமுக தலைமை கழக பேச்சாளர் மண்டபம் ராஜா முஹமது உள்பட பலர் பங்கேற்றனர்.
News April 20, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஏப்ரல் 19) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.