News March 19, 2024
திருவையாறு: ஆவணமில்லாத ரூ.1,13,800 பறிமுதல்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாலையில் வெட்டாறு பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜு பாண்டி தலைமையில் காவலர்கள் எட்வின் பிரபு, காளிதாசன் குழுவினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கேரளம், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரெஜி என்பருடைய காரில் ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.1,13,800 பறிமுதல் செய்தனர்.
Similar News
News October 22, 2025
தஞ்சையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் விவரம்

தஞ்சாவூர், விளார் சைலஜா மணிவிழா அரங்கத்திலும், தாராசுரம் மேல் பாக்கம், மாதவன் சீதையம்மாள் திருமண மண்டபத்திலும், அதிராம்பட்டினம் செல்லியம்மன் கோவில் திருமண மஹாலில் நாளை (அக்.23) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. மேலும் சுவாமிமலை பாலாம்பாள் திருமண மண்டபத்திலும், கீழ உளூர் அம்மா மண்டபத்திலும், திருப்பனந்தாள் ஸ்ரீ வேலன் திருமண மண்டபத்திலும் முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
தஞ்சை: மாநில தடகள போட்டிகள் ஒத்திவைப்பு

தஞ்சாவூரில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இக்கனமழை காரணமாக தஞ்சாவூரில் 24.10.2025 முதல் 29.10.2025 வரை நடைபெறுவதாக இருந்த மாநில அளவிலான குடியரசுதின விழா தடகள விளையாட்டுப் போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மழை விட்ட பிறகு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 22, 2025
தஞ்சாவூர்: அவசர கால உதவி எண் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்தில் 18004251100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.