News March 19, 2024

திருவையாறு: ஆவணமில்லாத ரூ.1,13,800 பறிமுதல்!

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாலையில் வெட்டாறு பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜு பாண்டி தலைமையில் காவலர்கள் எட்வின் பிரபு, காளிதாசன் குழுவினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கேரளம், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரெஜி என்பருடைய காரில் ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.1,13,800 பறிமுதல் செய்தனர்.

Similar News

News November 13, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.12) இரவு 10 மணி முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 12, 2025

தஞ்சாவூரில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டவர் கைது

image

தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த முகமது அலி ஜின்னாவின் பைக் செவ்வாய்க்கிழமை திருட்டுப் போனது. இதேபோல் மானோஜிப்பட்டி ராதிகாவின் பைக் அக்டோபர் 30ம் தேதி அன்று ஈஸ்வரி நகரில் திருடப்பட்டது. இதுகுறித்து இருவரும் அளித்த புகாரின் பேரில், அம்மாகுளத்தைச் சேர்ந்த கிசாந்த் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

News November 12, 2025

JUST IN தஞ்சை: 2 பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து

image

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த கோவிந்தபுரத்தில் இன்று காலை மயிலாடுதுறை சாலையில் சென்று கொண்டிருந்த இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப்பாக பேருந்தில் பயணம் செய்தவர்கள் பெரும் காயமின்றி உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியது. அப்பகுதியில் இதுபோல தொடர் விபத்துகள் நடைபெறுவதால், வேகத்தடை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!