News August 2, 2024
திருவெறும்பூர்- விமான நிலையத்திற்கு புதிய வழித்தட பேருந்து

திருவெறும்பூரில் இருந்து நாவல்பட்டு ஐடி பார்க் 100 அடி ரோடு வழியாக ஐடி பார்க் ஊழியர்கள் பயன்பெறும் வகையிலும் குண்டூர் தனியார் கல்லூரி மாணவி மாணவர்கள் பயன்படும் வகையிலும் அ 100 அடி ரோடு வழியாக விமான நிலையம் வரை பேருந்துகளை இயக்க வேண்டும். திருச்சி டிராபிக் திருவேங்கடம் என்பவர் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளித்துள்ளார்.
Similar News
News November 20, 2025
ஶ்ரீரங்கம் கோவிலில் வேலை வாய்ப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இளநிலை உதவியாளர் பதவிக்கான 10 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். இதற்கு வரும் நவ.25ஆம் தேதிக்குள் விண்ணப்பக்கலாம். மேலும் விவரங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் <
News November 20, 2025
திருச்சி மாவட்ட போலீசார் அதிரடி

திருச்சி சமயபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எஸ்.ஆர்.எம். மருத்துவமனை அருகே 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது தொடர்ந்து குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், நேற்று மங்கிலால் என்பவரும் திருச்சி எஸ்.பி பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
News November 20, 2025
திருச்சி: பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் – புகார்

தென்காசியை சேர்ந்த திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன் பிரதமர் மோடி குறித்து பொது வெளியில் அநாகரிகமாக கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறியும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் திருச்சி மாவட்டத் தலைவர் லெனின் பாண்டியன் தலைமையில், திருச்சி கன்ட்டோன்மென்ட் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது.


