News August 2, 2024

திருவெறும்பூர்- விமான நிலையத்திற்கு புதிய வழித்தட பேருந்து

image

திருவெறும்பூரில் இருந்து நாவல்பட்டு ஐடி பார்க் 100 அடி ரோடு வழியாக ஐடி பார்க் ஊழியர்கள் பயன்பெறும் வகையிலும் குண்டூர் தனியார் கல்லூரி மாணவி மாணவர்கள் பயன்படும் வகையிலும் அ 100 அடி ரோடு வழியாக விமான நிலையம் வரை பேருந்துகளை இயக்க வேண்டும். திருச்சி டிராபிக் திருவேங்கடம் என்பவர் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளித்துள்ளார்.

Similar News

News November 16, 2025

திருச்சி: ரூ.45,000 சம்பளத்தில் பேங்க் வேலை

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 21 – 30 வயதுக்குட்பட்ட நபர்கள்,<> இங்கே க்ளிக்<<>> செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆரம்ப அடிப்படை சம்பளமாக ரூ.44,500 வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க 30.11.2025 கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு www.nabard.org/careers அணுகவும். SHARE!

News November 16, 2025

திருச்சி: பள்ளி மாணவன் தற்கொலை

image

மணிகண்டம் அருகே நாகமங்கலத்தை சேர்ந்த லாரன்ஸ் மகன் ரோஷன் (15). தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ரோஷன் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரோஷன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மாணவன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 16, 2025

திருச்சி: ஆசிரியர் தகுதி தேர்வில் 576 பேர் ஆப்சென்ட்

image

திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – 1, 14 தேர்வு மையங்களில் நேற்று நடைபெற்றது. இத்தேர்வுக்கு 3951 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 3375 பேர் மட்டுமே இன்று தேர்வு எழுதினர். 576 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. இன்று ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – 2, 51 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இதில் 15,286 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

error: Content is protected !!