News September 13, 2024
திருவெறும்பூரில் வாலிபர் படுகொலை

திருவெறும்பூர் அடுத்த சர்க்கார் பாளையம் பனையக்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் சுந்தர் என்பவர் நேற்று இரவு உறவினர் வீட்டு மொட்டை மாடியில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதி மிகப் பரபரப்பாக காணப்படுகின்றது. மேலும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News December 17, 2025
திருச்சி: சிறுமி பாலியல் வன்கொடுமை – கோர்ட் அதிரடி

மணப்பாறை அருகே ஒரு கிராமத்தில், கடந்த 2021-ம் ஆண்டு மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமியை, சுரேஷ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது சிறுமி கத்தி கூச்சலிடவே, அவரது தலையில் கல்லால் அடித்துவிட்டு தப்பி ஓடிய சுரேஷை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் குற்றவாளி சுரேஷுக்கு நேற்று 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
News December 17, 2025
திருச்சி அருகே சிக்கிய திருட்டு கும்பல்

முசிறி உழவர் சந்தை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு உரிய வகையில் நின்று கொண்டிருந்த ராஜா (42), சுரேஷ் (42), சுப்ரமணி (48) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முசிறியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகைகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், நகைகளை மீட்டனர்.
News December 17, 2025
திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் வரும் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில், ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் செல்லாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


