News September 14, 2024
திருவீதி உலா வந்த வீரகணபதி… பக்தர்கள் பரவசம்!

விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் 7- ம் நாளான நேற்று (செப்.13) சேலம் கடைவீதியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயிலில் ராஜகணபதி உற்சவர்களுக்கு வீரகணபதி, கிருஷ்ணா கணபதி அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேள தாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட தேரில் மாடவீதிகளில் கம்பீரமாக எழுந்தருளிய வீரகணபதி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Similar News
News December 4, 2025
சேலத்தில் நடந்த கொடூரம்: 20 ஆண்டு சிறை!

சேலம் செட்டிச்சாவடி அண்ணாநகரை சேர்ந்த கார் டிரைவர் பிரகாஷ்ராஜ் (29), கடந்த 2022-ம் ஆண்டு 14 வயதுடைய 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பிரகாஷ்ராஜ் கைது செய்தனர். சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில், நேற்று பிரகாஷ்ராஜுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
News December 4, 2025
ஆத்தூர் அருகே விபசாரம்..அதிரடி கைது!

ஆத்தூர் அருகே பைத்தூர் ரோடு பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக ஆத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்திக்கு தகவல் வந்ததின் பெயரில், போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 34) என்பவர் 2 பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.இதனையடுத்து சுரேஷை கையும் களவுமாக பிடித்த போலீசார், பெண்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
News December 4, 2025
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் மாவட்டத்தில் 03-12-2025 நேற்று காவல் துறை சிறப்பு கண்காணிப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. சமூக நிதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தலைமையில் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி பகுதிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.


