News September 13, 2024
திருவிழாக்கள் நம் உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடியவை: முதல்வர்

மலையாள மொழி பேசும் மக்களால் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படும் ஓணம் போன்ற பண்டிகைகள், கலாச்சார உறவுகளை மீண்டும் புதுப்பிக்க உறவினர்களுக்கிடேயே ஆரோக்கியமான உறவுகளை வளர்க்கவும் உதவுகின்றன. ஓணம் அத்தப்பூ கோலத்தின் அழகிய நறுமணம் அனைவரது வாழ்விலும் ஒற்றுமையின் மகிழ்ச்சியையும், குடும்பத்தின் அரவணைப்பையும், செழிப்பின் மிகுதியையும் தரட்டும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Similar News
News November 21, 2025
புதுச்சேரி: கைவினை கண்காட்சி துவக்க விழா

தமிழ்நாடு அரசின் பூம்புகார் கைவினை விற்பனை மையம் மற்றும் கண்காட்சி துவக்க விழா, புதுச்சேரி வர்த்தக சபை வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சீனியர் எஸ்பி கலைவாணன் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். 10 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், 10க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்களின் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
News November 21, 2025
புதுச்சேரி: தொடர்ந்து வெளுத்து வாங்க போகும் மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, புதுச்சேரியில் ஓரிரு பகுதிகளில் நவ.21-ம் தேதி (இன்று) முதல் நவ.26-ம் தேதி (புதன்கிழமை) வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 21, 2025
புதுவை: நிவாரணம் பெறுபவர்கள் பட்டியலில் வெளியீடு!

புதுவை மாநிலத்தில் இயற்கை பேரிடர் மற்றும் மீன் பிடி தடை காலத்தில் அரசு நிவாரணம் வழங்கப்படும். நிவாரண தொகை பெறும் தகுதியான மீனவர்களின் முதல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதுவை 18, காரைக்கால் 5, மாகே 3, ஏனாம் 51 பேர் போலி ஆதார், போலி பதிவு போன்ற காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான தகவல் மீன்வளத்துறை இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


