News February 16, 2025
திருவிடச்சேரி: நிலை தடுமாறி ஆற்றில் இறங்கிய கார்

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகில் திருவிடச்சேரி என்ற ஊரில் (16.02.25) மாலை நன்னிலத்திலிருந்து குடவாசல் சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று நிலை தடுமாறி பக்கத்தில் உள்ள புத்தாற்றில் இறங்கியது. இதில் பயணம் செய்த யாருக்கும் எந்தவித பாதிப்புமில்லை.ஆபத்தான ஆற்று ஓரங்களில் தடுப்புச்சுவர் அரசு அமைத்து தந்தால் இது போன்ற சம்பவத்தை தடுக்கலாம் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News December 6, 2025
திருவாரூர்: BE படித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE , டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இத்தகவலை ஷேர் பண்ணுங்க
News December 6, 2025
தலைநகராக விளங்கிய திருவாரூர்!

தமிழக வரலாற்றில் திருவாரூர் மாவட்டம் மிக முக்கிய பகுதியாகும். இது முற்கால சோழர்களின் ஐந்து பாரம்பரிய தலைநகரங்களுள் ( ஆரூர், ஆவூர், வல்லம், குடவாயில், அழுந்தூர்) ஒன்றாகவும், அதன் பின் வந்த மன்னர்கள் முடிசூட்டிக்கொள்ளும் ஐந்து இடங்களில் (ஆரூர், கருவூர், உறையூர், சேய்ஞலூர், புகார்) ஒன்றாகவும் விளங்கியது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நமது ஊரை பற்றி அனைவருக்கு ஷேர் பண்ணுங்க!
News December 6, 2025
திருவாரூர்: உலக மண் தின விழா கொண்டாட்டம்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நேற்று (டிச.5) உலக மண் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மண் வளத்தை காக்க செய்ய வேண்டிய கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர். வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியர்கள் தனுஷ்கோடி, திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் ராமசாமி, கருணாகரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பேசினர்.


