News November 3, 2025
திருவாரூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 11, 2025
திருவாரூர்: இதற்கு இன்றே கடைசி

திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி நவம்பர் 4 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளையும் வீடு வீடாக சென்று கணக்கிட்டு படிவங்களை பூர்த்தி செய்து நிரப்பி வாங்கும் பணிகள் நடைபெற்று, தற்போது பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து படிவங்களை சமர்ப்பிக்காதவர்கள் இன்று (டிசம்பர் 11) மாலைக்குள் நிலை அலுவலரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News December 11, 2025
திருவாரூர்: மன்னார்குடி-சென்னை வந்தே பாரத் ரயில் இயக்க மனு

தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி இன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து தொகுதி தொடர்பான ரயில்வே கோரிக்கைகளை வழங்கினார். மன்னார்குடி-சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் நீடாமங்கலத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கினார்.
News December 11, 2025
திருவாரூர்: BE படித்தவர்களுக்கு அரசு வேலை

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 33 (அதிகபட்சம்)
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.55.000
5. கல்வித்தகுதி: BE
6. நேர்காணல் நடைபெறும் நாள்: 16.12.2025
7. மேலும் தகவலுக்கு: <
மற்றவர்களும் பயன்பெற இதனை ஷேர் பண்ணுங்க….


