News April 27, 2025

திருவாரூர்: விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு

image

இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 309 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Trafiic Controller) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பி.ஈ /பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகள் www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலைதேடும் உங்க நண்பருக்கு இதனை SHARE செய்யவும்..

Similar News

News April 28, 2025

திருவாரூரில் வருகிற 1ம் தேதி கிராம சபை கூட்டம்

image

திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 கிராம ஊராட்சிகளிலும், தொழிலாளர் தினமான 01.05.2025 அன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இக்கூட்டத்தில், தொழிலாளர் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல்,ஆகிய இனங்களை இணையவழி செலுத்துவதை உறுதிப்படுத்த பொதுமக்கள் கலந்து கொள்ள ஆட்சியர் மோகனசந்தரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

News April 28, 2025

திருவாரூர்: மின்தடை புகார்களுக்கான எண்

image

திருவாரூர் மாவட்டத்தில் மின்தடை புகார்களுக்கு கட்டணமில்லா தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலக முகவரி: 73, C – துர்கலையா ரோடு , திருவாரூர் -610001; மின்னஞ்சல் : setrvr@tnebnet.org மற்றும் தொலைப்பேசி எண்: 04366244099. இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க…

News April 28, 2025

திருவாரூர்: காணாமல்போன பெண் சடலமாக மீட்பு

image

முத்துப்பேட்டை ஜாம்புவானோடை கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி(46) என்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண், கடந்த 23ம் தேதி காணாமல் போயுள்ளார். இதுகுறித்து கணவர் ரமேஷ் முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்திருந்தார். இந்த நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள கந்தபரிச்சான் ஆற்றில் கஸ்தூரி அரைகுறை ஆடையுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். சடலத்தை மீட்ட போலீசார் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!