News April 11, 2025
திருவாரூர்: வாலிபால் வீரர்களுக்கு அருமையான வாய்ப்பு

திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில் நாளை (ஏப்.12) மதியம் 2 மணியளவில் வாலிபால் விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு திருவாரூர் அருகில் உள்ள அம்மையப்பன் குளோபல் கலைக் கல்லூரியில் இலவச சேர்க்கை, உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாலிபால் விளையாடும் உங்க நண்பருக்கு இதை மறக்காமல் SHARE செய்யவும்!
Similar News
News September 19, 2025
தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம்

பனை மரத்தை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் என்று அறிவிப்பை அரசாணையாக வெளியிட வேண்டுமென பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் அரசாணை எண் 238/12.09.2025 மூலம் பனையை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் என அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு பசுமை சூழல் பாதுகாப்பு இயக்க நிறுவனர் பருத்திசேரி ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.18) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 18, 2025
திருவாரூர்: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!

திருவாரூர் மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
✅துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
✅பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
✅கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
✅சம்பளம்: ரூ.15,900 –ரூ.62,000
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅கடைசி தேதி: 30.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..