News March 29, 2024
திருவாரூர்: வர்த்தகர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு

பேரளம் நகரத்தில் மழைநீரை வெளியேற்ற அமைக்கப்படும் வடிகால் நீண்ட நாட்களாக ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக பேரளம் கடைத்தெரு சாலை பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாமல் உள்ளதால் நாள் முழுவதும் மண், தூசிகள் பறந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆகவே இதனை விரைந்து முடிக்க கடையடைப்பு போராட்டம் வரும் 04-04-2024 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 26, 2025
திருவாரூர்: புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை திறப்பு விழா

நீடாமங்கலம் அருகில் உள்ள பெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நேற்று மாலை (நவ. 25) நடைபெற்றது. காமதேனு சாரீட்டீஸ் மூலம் வகுப்பறையில் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு வர்ணப் பூச்சு அடிக்கப்பட்டு புதுப்பிக்க பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் இளஞ்செழியன் தலைமை வகித்தார்
News November 26, 2025
திருவாரூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருவாரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
திருவாரூர்: மூழ்கிய பயிர்களை பார்வையிட்ட எம்.எல்.ஏ

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இதன் காரணமாக சம்பா மற்றும் தாளடி பயிர்கள் பயிரிடப்பட்ட வயல்களில் மழை நீர் புகுந்து முழுவதுமாக மூழ்கி காணப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக முத்துப்பேட்டை, தொண்டியக்காடு, மாங்குடி பகுதிகளில் மழை நீரில் மூழ்கிய பயிர்களை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து நேற்று (நவ 25) பார்வையிட்டார்.


