News March 29, 2024

திருவாரூர்: வர்த்தகர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு

image

பேரளம் நகரத்தில் மழைநீரை வெளியேற்ற அமைக்கப்படும் வடிகால் நீண்ட நாட்களாக ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக பேரளம் கடைத்தெரு சாலை பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாமல் உள்ளதால் நாள் முழுவதும் மண், தூசிகள் பறந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆகவே இதனை விரைந்து முடிக்க கடையடைப்பு போராட்டம் வரும் 04-04-2024  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 28, 2025

திருவாரூர்: பாதுகாப்பு பெட்டக வைத்து கொள்ள அறிவுறுத்தல்

image

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவசரகால பெட்டகம் ஒன்றை கையோடு வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலர் உணவுகள், மாற்று ஆடைகள், டார்ச் மற்றும் உதிரி பேட்டரிகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, அத்தியாவசிய மருந்துகள், குடை முதலியவற்றையும், மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் செல்ல பாலித்தீன் பை உள்ளிட்டவற்றை பாதுகாப்பு நடவடிக்கையாக வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 28, 2025

BREAKING திருவாரூர்: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

image

வங்கக் கடலில் நிலவும் ‘திட்வா’ புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.29) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். SHARE NOW!

News November 28, 2025

திருவாரூர் மாவட்டத்தை புரட்டி போட போகும் புயல்

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி வருகிறது. இது திருவாரூர் மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.28) பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழையும் நாளை கனமழையும் கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!