News April 4, 2025
திருவாரூர்: லஞ்சம் வாங்கிய கோயில் செயல் அலுவலர் கைது

திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் ஜோதி. இவர் கோவிலில் எழுத்தராக பணிபுரியும் சசிகுமார் என்பவரின் பழைய சம்பள பாக்கியை விடுவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சசிகுமார் புகார் அளிக்கவே மன்னார்குடி ஆனந்த விநாயகர் கோயிலில் லஞ்ச பெற முயன்ற போது ஜோதியை போலீசார் கையும் களவுமாக நேற்று கைது செய்தனர். SHARE
Similar News
News November 27, 2025
திருவாரூர்: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருவாரூர்மாவட்ட மக்கள் 04366-226970 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News November 27, 2025
BREAKING: திருவாரூர் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்!

இலங்கை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நவ.28 (நாளை) மற்றும் நவ.29 ஆகிய தேதிகளில் மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. SHARE NOW!
News November 27, 2025
திருவாரூர்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

முத்துப்பேட்டை கோபாலசமுத்திரம் கோரையாறு பகுதியில் சப்.இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் சோதனையில் ஈடுபட்டார். அப்பொழுது அங்கு உதயமார்த்தாண்டபுரத்தை சேர்ந்த முகம்மது ஹாலிக் (19) என்பவர் 150 கிராம் எடையில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் முகம்மது ஹாலிக் மீது வழக்கு பதிவு செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.


