News April 4, 2025
திருவாரூர்: லஞ்சம் வாங்கிய கோயில் செயல் அலுவலர் கைது

திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் ஜோதி. இவர் கோவிலில் எழுத்தராக பணிபுரியும் சசிகுமார் என்பவரின் பழைய சம்பள பாக்கியை விடுவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சசிகுமார் புகார் அளிக்கவே மன்னார்குடி ஆனந்த விநாயகர் கோயிலில் லஞ்ச பெற முயன்ற போது ஜோதியை போலீசார் கையும் களவுமாக நேற்று கைது செய்தனர். SHARE
Similar News
News November 21, 2025
திருவாரூர்: ஆட்சியர் தலைமையில் SIR ஆலோசனைக் கூட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (நவ.20) மாலை திருவாரூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
News November 21, 2025
திருவாரூர்: B.Sc போதும் விமானப்படையில் வேலை!

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA.,
3. கடைசி தேதி : 14.12.2025 @ 11.30 PM
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500
5. வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 அதிகபட்சம் 26
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News November 21, 2025
திருவாரூர் மாவட்டத்தில் தஞ்சை சரக DIG ஆய்வு

தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் (DIG) T.ஜியாவுல் ஹக் நேற்று (20.11.2024) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காவல் அலுவலகங்களில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் உடனிருந்தார். இந்த நிகழ்வில், காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களும் உடன் இருந்தனர்.


