News April 17, 2025

திருவாரூர் ரூ.56,100 சம்பளத்தில் அரசு வேலை

image

TNPSC குரூப் 1 வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் என மொத்தமாக 72 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.56,100 முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய<> <>tnpsc.gov.in<<>> <<>>என்ற இணையத்தில் பார்க்கலாம். இதை SHARE செய்யவும்

Similar News

News December 6, 2025

திருவாரூர்: தவெக சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

image

திருவாரூர் மேற்கு மாவட்ட தவெக சார்பில், அம்பேத்கரின் 70வது நினைவு தினம் இன்று மன்னார்குடியில் அனுசரிக்கப்பட்டது. மன்னார்குடி பெருந்து நிலையம் அருகே உள்ள அண்ணல் அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் திருவாரூர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில், தவெக தொண்டர்கள் அம்பேத்கரின் உருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News December 6, 2025

திருவாரூர்: பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை!

image

காரியமங்கலம் கிராமத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன் தலைமையில், 22 நபர்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்தை சேதப்படுத்திய வழக்கு திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்த நிலையில், இன்று பி .ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை, 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, திருவாரூர் மகிளா நீதி மன்ற நீதிபதி சரத்ராஜ் அதிரடி உத்தரவுவிடுத்தார்.

News December 6, 2025

திருவாரூர் ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டம் (டிசம்பர் 7) அன்று நடைபெற இருப்பதாக தமிழ்நாடு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் அறிவித்திருந்தார். இந்நிலையில் ஒன்றிய அரசு மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கையை கர்நாடகத்திற்கு திருப்பி அனுப்பியதாக கூறப்பட்ட காரணத்தினால், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

error: Content is protected !!