News April 4, 2025
திருவாரூர் மாவட்ட இளைஞர்கள் கவனத்திற்கு…

தமிழக காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் மொத்தம் 1,299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு வரும் ஏப்.7-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் tnusrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று மே.3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE NOW
Similar News
News December 20, 2025
திருவாரூர்: தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம்

நீடாமங்கலம் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் பட்டியல் இனத்தவர்களுக்கான துணை திட்டத்தின் அடிப்படையில் நெடும்பலம் கிராம விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு மற்றும் வர்த்தக நோக்கில் தேன் உற்பத்தி செய்ய புதிய உத்திகள் குறித்த பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. தேன் அறுவடை சுத்திகரிப்பு மற்றும் மார்க்கெட்டிங் செய்வது குறித்து பயிற்சியாளர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி செய்தனர்.
News December 20, 2025
திருவாரூர்: வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருவாரூர் தொகுதியில் 2,86,973 வாக்காளர்களில் 2,49,036 வாக்காளர்களுக்கு பதிவேற்றம் செய்யப்பட்டது. முகவரி இல்லாதவர்கள் 7,528 பேர்; இறப்பு 13,251 பேர்; இரட்டை பதிவு 1,533 பேர்; இடம் பெயர்ந்தவர்கள் 15,530 பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 20, 2025
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் (டிச.19) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஷேர் செய்யுங்கள்!


