News August 6, 2024
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 10 வட்டாரங்களில் வட்டாரத்திற்கு ஒருவர் வீதம், வட்டார வள பயிற்றுநர்கள் பணியிடங்களுக்கு தகுதியுடைய சுய உதவிக் குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், 8-ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 3, 2026
திருவாரூர்: இன்று இதை MISS பண்ணாதீங்க!

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று (ஜன.03) மற்றும் நாளை (ஜன.04) காலை 9:30 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கல் தொடர்பான சிறப்பு முகம் நடைபெற உள்ளது. மேலும் இந்த முகாமில் 1-1-2026 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6-ஐ பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 3, 2026
திருவாரூர்: கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை!

திருவாரூர் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் 137 கூட்டுறவு வங்கிகளில் 1,300 டன் யூரியா உரம், 439 டன் டி.ஏ.பி. மற்றும் 647 டன் காம்ப்ளக்ஸ் உரமும் கையிருப்பில் உள்ளது. மேலும் தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் உரங்களைப் பெற்று விவசாயப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
News January 3, 2026
திருவாரூர்: ஆட்சியர் உதவித்தொகை அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்பு அட்டை வைத்துள்ள குடும்பத்தினருக்கு 04-08-2025க்கு பிறகு மரணத்திற்கான உதவித்தொகை ரூ.30,000; ஈமச்சடங்கிற்கு ரூ.10,000; விபத்து உயிரிழப்புக்கான நிவாரணம் ரூ.2,00,000; உடல் உறுப்பு இறப்பிற்கான உதவித்தொகை ரூ.1,00,000 வழங்கப்படவுள்ளது. இதற்கு மாவட்டத்தில் உள்ள அந்தந்த பகுதிக்குரிய வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


