News December 13, 2024
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட அளவிலான திருக்குறள் போட்டிகள் வருகின்ற டிச.24-ஆம் தேதி, 10 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது. பின்னர் டிச.27-இல் அனைத்து வயதினருக்கான பேச்சு போட்டியும், டிச.30 வினாடி வினா போட்டியும் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு 9444523125 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News April 25, 2025
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை-இளைஞர் கைது

திருவாரூர் மாவட்டத்தில், 7 வயது சிறுமி ஒருவர் அவரது தாய்மாமன் வீட்டில் தங்கி 2-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஆம்பூர் பெரிய காலனி தெரு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(28) என்பவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அடுத்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் விக்னேசை கைது செய்தனர்
News April 24, 2025
இ-சேவை மையத்தில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதிகளா ?

உங்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, வருமானம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வெறும் 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளிக்கலாம். இந்த தகவலை இப்போதே ஷேர் பண்ணுங்க!
News April 24, 2025
திருவாரூர்: ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க நீட்டிக்கப்பட்ட தேதி நாளையுடன் (ஏப்.25) முடிவடைகிறது. எனவே திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் <