News March 25, 2025
திருவாரூர் மாவட்டம் தேமுதிக மாநில நிர்வாகி அறிவிப்பு

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நீடாமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த இரா ஜெயபால் அவர்கள் தேமுதிக தலைமை செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்த நிலையில் மார்ச் 24 இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இரா.ஜெயபால்-ஐ மாநில தொழிற்சங்க துணைத் தலைவராக நியமனம் செய்துள்ளார்.
Similar News
News November 27, 2025
BREAKING: திருவாரூர் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்!

இலங்கை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நவ.28 (நாளை) மற்றும் நவ.29 ஆகிய தேதிகளில் மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. SHARE NOW!
News November 27, 2025
திருவாரூர்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

முத்துப்பேட்டை கோபாலசமுத்திரம் கோரையாறு பகுதியில் சப்.இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் சோதனையில் ஈடுபட்டார். அப்பொழுது அங்கு உதயமார்த்தாண்டபுரத்தை சேர்ந்த முகம்மது ஹாலிக் (19) என்பவர் 150 கிராம் எடையில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் முகம்மது ஹாலிக் மீது வழக்கு பதிவு செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
News November 27, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுப்பெற்றது. மேலும் இது வலுப்பெற்று புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டதின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.27) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


