News March 25, 2025
திருவாரூர் மாவட்டம் தேமுதிக மாநில நிர்வாகி அறிவிப்பு

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நீடாமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த இரா ஜெயபால் அவர்கள் தேமுதிக தலைமை செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்த நிலையில் மார்ச் 24 இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இரா.ஜெயபால்-ஐ மாநில தொழிற்சங்க துணைத் தலைவராக நியமனம் செய்துள்ளார்.
Similar News
News November 7, 2025
திருவாரூர்: பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை!

எரவாஞ்சேரி பகுதியில் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வந்த லலிதா, அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை நேற்று திருவாரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் லலிதாவிற்கு போக்கோ சட்டத்தின் கீழ் 54 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.18,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
News November 7, 2025
திருவாரூர்: கடலில் தவறி விழுந்தவர் பலி

முத்துப்பேட்டை கடல் முகத்துவார பகுதியில் மன்னங்காடை சேர்ந்த மீனவர் ரவி (39) மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்து மூழ்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் ரவியை சடலமாக மீட்டனர். இதையடுத்து அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
News November 7, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


