News March 25, 2025
திருவாரூர் மாவட்டம் தேமுதிக மாநில நிர்வாகி அறிவிப்பு

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நீடாமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த இரா ஜெயபால் அவர்கள் தேமுதிக தலைமை செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்த நிலையில் மார்ச் 24 இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இரா.ஜெயபால்-ஐ மாநில தொழிற்சங்க துணைத் தலைவராக நியமனம் செய்துள்ளார்.
Similar News
News November 14, 2025
திருவாரூர் மாவட்டத்தில் TET தேர்வு எழுதும் 8213 பேர்

திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 15, 16 தேதிகளில் TET தேர்வை மொத்தம் 8213 பேர் எழுதவுள்ளனர். நவம்பர் 15 அன்று நடைபெறும் TET-I தேர்வை 8 மையங்களில் 1843 தேர்வர்களும் நவம்பர் 16 அன்று நடைபெற உள்ள TET-II தேர்வினை 19 மையங்களில் 6370 பேரும் எழுதவுள்ளனர். தேர்வு மையத்தில் தடையில்லா மின்வசதி, குடிநீர் வசதி, அரசு போக்குவரத்து வசதி ஆகியவை முழுவீச்சில் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டு வருகிறது.
News November 14, 2025
திருவாரூர்: ஜெருசலேம் புனித பயணத்திற்கு விண்ணப்பம்

நவம்பர் 1-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட 600 கிறிஸ்துவ பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதன்படி 550 பேருக்கு ரூ.37,000-மும், கன்னிகாஸ்திரிகளுக்கு ரூ.60,000-மும் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் பிற்படுத்தப்பட்டோர் & சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க 28.02.2026 கடைசி தேதி என மாவட்ட ஆட்சியரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
திருவாரூர்: பெண் மீது வன்கொடுமை வழக்குப் பதிவு!

முத்துப்பேட்டை தில்லைவிளாகத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வியின் வீட்டு ஆடு அப்பகுதியைச் சேர்ந்த மலர்கொடி என்பவரின் வயலில் மேய்ந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மலர்கொடி செந்தமிழ் செல்வியை சாதி பெயரை கூறி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்த புகாரின் அடிப்படியில், வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த முத்துப்பேட்டை போலீசார், மலர்கொடியை தேடி வருகின்றனர்.


