News September 14, 2024

திருவாரூர் மாவட்டத்தில் 2781 பேர் தேர்வு எழுதவில்லை

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-2 தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து மொத்தம் 11,994 பேர் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், இன்று நடைபெற்ற தேர்வில் 9213 பேர் மட்டுமே எழுதினர். 2781 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 22, 2025

திருவாரூர்: நீரில் மூழ்கிய 5000 ஏக்கர் சம்பா!

image

நன்னிலம், திருக்கண்டீஸ்வரம், தூத்துக்குடி, மணவாளம்பேட்டை, அதம்பாவூர், அச்சுதமங்கலம், சரபோஜிராஜபுரம், வெள்ளை அதம்பார், மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகத் தொடங்கி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News October 22, 2025

திருவாரூர்: மழையால் இடிந்து விழுந்த 4 வீடுகள்!

image

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக, திருவாரூர் மாவட்டாரம் பெருங்குடி கிராமத்தில் தெற்கு தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. மேலும் அதே பகுதியில் ஜெயபாரதி, சுபஸ்ரீ, செல்வமணி ஆகிய 3 பேரின் கூரை வீட்டின் சுவர்களும் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.

News October 21, 2025

BREAKING: திருவாரூர் நாளை விடுமுறை அறிவிப்பு

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதன் காரணமாக திருவாரூரில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளிக்கு விடுமுறை அறிவிப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!