News November 10, 2024

திருவாரூர் மக்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

தமிழ்நாட்டில் உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடிப்பு வருவாயினை பெருக்கிட ஏதுவாகவும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க மீனவர்கள் மற்றும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக உள்ள மீனவர்களுக்கு 50% மானியத்தில் மீன்பிடி உபகரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள திருவாரூரைச் சேர்ந்தவர்கள் நவ.20 க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News

News December 7, 2025

திருவாரூர் ரயில் நிலையத்தில் தீவிர பரிசோதனை

image

திருவாரூர் ரயில் நிலையத்தில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு நினைவு நாளான நேற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி பயணிகள் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் போலீசார் ரயில் நிலைய நுழைவாயில் தளங்களில் பயணிகளிடம் தீவிரமாக பரிசோதனை நடத்தினார்கள். மேலும், உடமைகள் அனைத்தும் மேற்பார்வை செய்யப்பட்டது.

News December 7, 2025

திருவாரூர்: பண்ணை தொழில் செய்ய சூப்பர் வாய்ப்பு!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News December 7, 2025

திருவாரூர் மாவட்டத்தின் மழை அளவு

image

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. குறிப்பாக திருவாரூர், கோட்டூர், ராயநல்லூர், பல்லவராயன், கட்டளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் காலை 6 மணி அளவில் 57 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!