News August 2, 2024
திருவாரூர்: புதிய மாநில பொதுச்செயலாளர் நியமனம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக புதிய நிர்வாகிகளை கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று அறிவித்தார். அதன்படி கட்சியின் புதிய மாநில பொதுச்செயலாளராக குடவாசல் எஸ்.தினகரனை நியமனம் செய்யப்பட்டுள்ளார். 64 வயதாகும் இவர் கடந்த 1983-ஆம் ஆண்டு ஒன்றுபட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியால் திருவாரூர் மாவட்ட தலைவராகவும் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 5, 2025
திருவாரூர்: செவிலியரை தாக்கியவருக்கு சிறை

நன்னிலம் வட்டம், வேதாந்தபுரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2014-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பணியில் இருந்த செவிலியரை தாக்கியுள்ளார். இது குறித்து பேரளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரித்து வந்த நிலையில், நேற்று செவிலியரை தாக்கிய மணிகண்டனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
News December 5, 2025
திருவாரூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு…

திருவாரூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 5, 2025
திருவாரூர்: வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 13.12.2025-ம் தேதி அன்று திருவாரூர் விளமல் கல்லுப் பாலம் அருகில், கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இதற்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


