News June 28, 2024

திருவாரூர்; பி.ஆர். பாண்டியன் கோரிக்கை

image

தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில், “தமிழக அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 வழங்கி வருகிறது. இது தமிழக அரசின் ஏமாற்று நாடகம். தற்போது ஒடிசாவில் பதவியேற்ற புதிய அரசு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்குவது போல் தமிழக அரசும் விவசாயிகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்கவேண்டும்” என கூறியுள்ளார்.

Similar News

News October 17, 2025

திருவாரூர்: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

image

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் செய்து<<>> Apply செய்யவும். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை நேரில் அணுகவும். தகவலை ஷேர் பண்ணுங்க!

News October 17, 2025

திருவாரூர்: பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் கணக்கெடுப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வந்தது. இதனடையில் 50,000 ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிய நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

News October 17, 2025

திருவாரூர் நகராட்சி ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு

image

திருவாரூர் நகராட்சி ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று பரிசு பொருட்களை நகர் மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் வழங்கினார். இதில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நகரச் செயலாளர் வாரை பிரகாஷ், நகரமன்ற உறுப்பினர் ரஜினி சின்னா உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

error: Content is protected !!