News June 27, 2024

திருவாரூர்; பி.ஆர். பாண்டியன் கோரிக்கை

image

தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 வழங்கி வருகிறது. இது தமிழக அரசின் ஏமாற்று நாடகம். தற்போது ஒடிசாவில் பதவியேற்ற புதிய அரசு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500 வழங்குவது போல் தமிழக அரசும் விவசாயிகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500 வழங்கவேண்டும்” என கூறியுள்ளார்.

Similar News

News December 15, 2025

திருவாரூர்: பெற்றோர் திட்டியதால் இளைஞர் தற்கொலை

image

கொரடாச்சேரி அருகே மேலராதாநல்லூரைச் சேர்ந்தவர் அஜித் (21). இவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்ததனால் மன வேதனை அடைந்த அஜித் சம்பவத்தன்று விஷம் குடித்து கண்கொடுத்தவனிதம் பாலம் அருகே மயங்கி கிடந்துள்ளார். இதனை அந்த அஜித்தின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜித் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

News December 15, 2025

திருவாரூர்: மனைவியை கொல்ல முயன்ற கணவர்!

image

குடவாசல் கண்டியூரைச் சேர்ந்த ஆதித்யன்(28), பிரேமா(24) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் சமீபத்தில் ஆதித்யன் வேறு ஒரு பெண்ணுடன் பழகியதை அடுத்து, ஏற்பட்ட தகராறில் ஆதித்யன் டீசலை ஊற்றி பிரேமாவை கொளுத்தி கொல்ல முயன்றுள்ளார். இதில் காயமடைந்த பிரேமாவை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதையடுத்து குத்தாலம் போலீசார் பிரேமாவின் புகாரின் அடிப்படையில் ஆதித்யனை கைது செய்தனர்.

News December 15, 2025

திருவாரூர்: கார் மோதி விவசாயி பலி

image

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே ஊர்குடியைச் சேர்ந்தவர் கோட்டைச்சாமி (55). விவசாயியான இவர், நேற்று தனது ஸ்கூட்டரில் திருவாரூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊர்குடி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கோட்டைசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

error: Content is protected !!