News April 22, 2025
திருவாரூர்: தமிழில் பெயர்ப் பலகை வைக்க காலக்கெடு நிர்ணயம்

தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் கட்டாயம் தமிழில் பெயர்ப் பலகை வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் வரும் மே.15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயர்ப் பலகை வைத்திட வேண்டும் என திருவாரூர் கலெக்டர் மோகனசந்திரன் காலக்கெடு நிர்ணயித்துள்ளார். தவறும் பட்சத்தில் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. SHARE !
Similar News
News October 23, 2025
திருவாரூர்: ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள 50 மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: வங்கி வேலை
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.64,000-ரூ.1,20,940
4. வயது வரம்பு: 25-32
5. கடைசி தேதி : 30.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…
News October 23, 2025
திருவாரூர்: இளைஞர்கள் உதவித்தொகை வேண்டுமா?

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் வாயிலாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேரில் சென்று இலவசமாக விண்ணப்பப்படிவத்தை பெற்று நவம்பர் 30-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
News October 23, 2025
திருவாரூர்: காவல்துறை அவசர கால உதவி எண்கள்

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு, “பொதுமக்கள் மழைக்கால அவசர உதவிக்கு 1077, 93456440279, 04366-226623, 9043989192, 9488547941 ஆகிய மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை உதவி எண்ணுக்கும்; காவல்துறை உதவிக்கு 100-க்கும்; மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அரை உதவிக்கு 9498181220 என்ற எண்ணுக்கும்; தீயணைப்பு துறை உதவிக்கு 101-ஐ தொடர்பு கொள்ளலாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.