News May 8, 2025
திருவாரூர்: தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கவும். சம்பளமாக மாதம் ரூ.16,600 முதல் ரூ.57,900 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்!
Similar News
News November 25, 2025
திருவாரூர்: சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்பு

திருவாரூர் மாவட்ட இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News November 25, 2025
திருவாரூர்: மழை நீரில் மூழ்கிய 700 ஏக்கர் நெற்பயிர்

முத்துப்பேட்டை பகுதியில் தொடர்ச்சியாக கனமழை இடைவிடாது பெய்து வருகிறது. இதில் இன்று காலை வரை விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் வடகாடு கோவிலூர், ஆலங்காடு பகுதியில் சுமார் 700 ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் நீரில் மூழ்கியது. கடன் வாங்கி ஏக்கருக்கு 30ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து சாகுபடி செய்துள்ளதால் கவலையடைந்த விவசாயிகள் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் .
News November 25, 2025
திருவாரூர்: டூவீலர் சக்கரத்தில் சேலை சிக்கி பலி!

சித்தன்வாலூரை சேர்ந்தவர் மகேஸ்வரி (42). இவர் சத்துணவு சமையலராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கணவருடன் மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறையில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். அப்பொழுது மகேஸ்வரி சேலை பைக்கின் சக்கரத்தில் சிக்கியதில் கீழே விழுந்ததார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயமடைய ரத்தவெள்ளத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


