News January 23, 2025
திருவாரூர்: கிராம சபை கூட்டம் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் (ஜன.26) குடியரசு தினம் அன்று சாதிய, பாலின பாகுபாடின்றியும், எவ்வித புகார்களுமின்றியும், தனி அலுவலர் பொது மக்களுடன் இணக்கமாக செயல்பட்டு கிராம சபை கூட்டத்தினை நடத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
Similar News
News December 5, 2025
திருவாரூர்: வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 13.12.2025-ம் தேதி அன்று திருவாரூர் விளமல் கல்லுப் பாலம் அருகில், கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இதற்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News December 5, 2025
திருவாரூர் மாவட்டத்தில் ஆட்டோக்கள் ஓடாது

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் சுழற்சி முறையில் ஆட்டோக்கள் இயக்குவதை தடை செய்யக்கோரி, நாளை (டிச.06) காலை 10 மணியளவில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள சிஐடியு தொழிற்சங்கத்தினர் சார்பாக ஆட்டோக்கள் ஓடாது என திருவாரூர் மாவட்ட சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
News December 5, 2025
திருவாரூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

திருவாரூர் துணை மின் நிலையம் மற்றும் கொரடாச்சேரி, அடியக்கமங்கலம் துணை மின் நிலையங்களில் நாளை (டிச.06) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திருவாரூர், கடைவீதி, விளமல், மாவூர், மாங்குடி, அலிவலம், கொரடாச்சேரி, அடியக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


