News April 13, 2024

திருவாரூர்: காந்தி சிலை முன்பு வயதான தம்பதி உண்ணாவிரதம்

image

முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் இடையர்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன். அவரது மனைவி தங்கராணி ஆகியோர் தனது பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று உண்ணாவிரதம் இருந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஏப்ரல்.25ஆம் தேதிக்குள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் அங்கிருந்து புறப்பட்டனர்.

Similar News

News December 5, 2025

திருவாரூர்: செவிலியரை தாக்கியவருக்கு சிறை

image

நன்னிலம் வட்டம், வேதாந்தபுரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2014-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பணியில் இருந்த செவிலியரை தாக்கியுள்ளார். இது குறித்து பேரளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரித்து வந்த நிலையில், நேற்று செவிலியரை தாக்கிய மணிகண்டனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News December 5, 2025

திருவாரூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

திருவாரூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News December 5, 2025

திருவாரூர்: வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு!

image

திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 13.12.2025-ம் தேதி அன்று திருவாரூர் விளமல் கல்லுப் பாலம் அருகில், கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இதற்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!