News April 13, 2024
திருவாரூர்: காந்தி சிலை முன்பு வயதான தம்பதி உண்ணாவிரதம்

முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் இடையர்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன். அவரது மனைவி தங்கராணி ஆகியோர் தனது பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று உண்ணாவிரதம் இருந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஏப்ரல்.25ஆம் தேதிக்குள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் அங்கிருந்து புறப்பட்டனர்.
Similar News
News November 21, 2025
திருவாரூர்: கொட்டி கிடக்கும் அரசு வேலை!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 5810 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: Any Degree
3. கடைசி தேதி : 27.11.2025
4. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News November 21, 2025
திருவாரூரில் தொடரப்போகும் மழை

வளிமண்டல மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நவ.21-ம் தேதி (இன்று) முதல் நவ.26-ம் தேதி (புதன்கிழமை) வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 21, 2025
திருவாரூர்: ஆட்சியர் தலைமையில் SIR ஆலோசனைக் கூட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (நவ.20) மாலை திருவாரூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.


