News March 25, 2025

திருவாரூர் கலெக்டர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

image

திருவாரூர் மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தில் நிதி உதவி பெற்று வரும் விவசாயிகள் தங்களது நில உடமை பதிவுகளை வரும் மார்ச்.31ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு திருவாரூர் கலெக்டர் மோகனச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.அதுபோல இதுவரை பி.எம் கிசான் திட்டத்தில் பதிவு செய்யாத விவசாயிகள் வரும் 31-ஆம் தேதிக்குள் தங்களது விபரங்களை சரிபார்த்து பதிவு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!

Similar News

News December 5, 2025

திருவாரூர்: செவிலியரை தாக்கியவருக்கு சிறை

image

நன்னிலம் வட்டம், வேதாந்தபுரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2014-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பணியில் இருந்த செவிலியரை தாக்கியுள்ளார். இது குறித்து பேரளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரித்து வந்த நிலையில், நேற்று செவிலியரை தாக்கிய மணிகண்டனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News December 5, 2025

திருவாரூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

திருவாரூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News December 5, 2025

திருவாரூர்: வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு!

image

திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 13.12.2025-ம் தேதி அன்று திருவாரூர் விளமல் கல்லுப் பாலம் அருகில், கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இதற்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!