News August 16, 2024

திருவாரூர் எஸ்பி நேரில் ஆய்வு

image

நீடாமங்கலத்தில் காவலரை வெட்டி விட்டு தப்ப முயன்ற ரவுடி மனோ நிர்மல் ராஜை போலீசார் சுட்டுப் பிடித்தனர். இதில் காயம் அடைந்து அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட காவலர் விக்னேஷ் சப்இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் ஆகியோரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்றிரவு திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் நேரில் உடல்நிலை குறித்து விசாரணை நடத்தி ஆறுதல் கூறினார். அப்போது காவல் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Similar News

News November 23, 2025

திருவாரூர்: வெளுக்க போகும் மழை – எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வாங்க் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.23) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 23, 2025

திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 1194 வாக்குச்சாவடி மையங்களில் கணக்கிட்டு படிவம் நிரப்புவதற்காக உதவி சேவை மையம், இன்று (நவ.23) அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் செயல்பட உள்ளது. இதனிடையில் உதவி சேவை மையத்தில் தவறான தகவல் வழங்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 பிரிவு 31ன் படி, தண்டனைக்குரியது என்பது தெரிவிக்கப்படுகிறது என்று ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

News November 23, 2025

திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட பொதுமக்கள் மழைக்கால அவசர உதவிக்கு, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை உதவிக்கு 1077, 93456440279, 04366-226623, 9043989192, 9488547941, காவல்துறை உதவிக்கு 100, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை உதவிக்கு 9498181220, தீயணைப்பு துறை உதவிக்கு 101 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!