News April 5, 2025

திருவாரூர் ஆழித் தேரின் சிறப்புகள்!

image

திருவாரூர் தேர்த் திருவிழாவிற்கு தனி சிறப்பு உள்ளது. 1748 இல் நடந்த ஆழித் தேரோட்டம் பற்றி தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் ஆவணங்கள் உள்ளது. 1927ஆம் ஆண்டு இந்த தேர் முற்றிலும் தீயில் எரிந்தது. அப்போது 10,000 பேர் கூடி தேரை இழுத்ததாகவும், அதில் 10 சக்கரங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தேர் 7 அடுக்குகளுடன், 96 அடி உயரமும், சுமார் 300 டன் எடையும் கொண்டதாகும். உங்களுக்கு தெரிந்ததை கமெண்ட் பண்ணுங்க

Similar News

News December 2, 2025

திருவாரூர்: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

image

திருவாரூர் மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 2, 2025

திருவாரூர்: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் & தமிழ்நாடு மாநில ஊரக ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிச.,13 அன்று திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04366224226 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

News December 2, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரையிலும் அல்லது 25% மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வ.மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதற்கு www.msmeonlie.tn.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!