News April 21, 2025
திருவாரூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

திருத்துறைப்பூண்டி அருகே மடத்துப்புரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் நேற்றுமுன்தினம் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Similar News
News January 7, 2026
திருவாரூர்: 132 மாணவர்களுக்கு விருது

திருவாரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் சமூகநீதி கல்லூரி விடுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு, சென்னையில் 2 மாதங்களுக்கு முன்பு கலை, இலக்கியம் & விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 7 கல்லூரிகளைச் சேர்ந்த 421 குழுக்களில் 132 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கான கேடயம் & பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.
News January 6, 2026
திருவாரூர்: பணி உயர்வு வேண்டுமா? இங்கு செல்லுங்கள்!

திருவாரூரில் ஸ்ரீ வாஞ்சிநாதர் அமைத்துள்ளது. இக்கோயிலில் சென்று வழிபடுவதால் கல்வி, செல்வம், குடும்ப நலன், பணி உயர்வு, திருமணம் கைகூடுதல், நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, முதல் குழந்தைக்கு அன்னப்ராசனம் செய்தல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 6, 2026
திருவாரூர்: 10th போதும் அரசு வேலை!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 2025-26ல் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 282
3. வயது:18 வயதுக்கு மேல்
4. சம்பளம்: ரூ.20,000
5. கல்வித் தகுதி: 10th,12th, Diploma
6. கடைசி தேதி: 31.01.2026
7.மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!


