News April 20, 2025

திருவாரூர் அமையும் பவர் பிளாண்ட்

image

தமிழகத்தில் முதல் முறையாக திருவாரூர் மற்றும் கரூரில் தலா 15 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்களை பேட்டரி வசதியுடன் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இத்திட்டம் பொது – தனியார் கூட்டு முயற்சியால் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையங்கள் 9,151 மெகாவாட் திறனில் அமைக்கப்பட உள்ளன.

Similar News

News November 19, 2025

திருவாரூர்: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News November 19, 2025

திருவாரூர் விளையாட்டு அரங்கில் வேலைவாய்ப்பு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு பெண் யோகா பயிற்சியாளர் நியமிக்கபடவுள்ளார். ஆகவே, திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகத்தில், வருகிற 20-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து, பெண் யோகா பயிற்சியாளர்கள் 21-ம் தேதி காலை விளையாட்டு அலுவலகத்தில் நேரில் தேர்வில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News November 19, 2025

திருவாரூரில் தொடரும் மஞ்சள் அலெர்ட்!

image

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக, திருவாரூர் மாவட்டத்திற்கு நேற்று மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.19) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கூறி இன்றும் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!