News February 16, 2025

திருவாரூர்:மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

image

திருவாரூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் திருவாரூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் வரும் 21ஆம் தேதி நடக்கிறது. அதன்படி காலை 11 மணியளவில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும். இதில் திருவாரூர், கச்சனம், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், ஶ்ரீவாஞ்சியம், ஆலங்குடி, வலங்கைமான், பேரளம் ஆகிய பகுதிக்கு உட்பட்டவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 22, 2025

திருவாரூர்: விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

சமூக நலன் மகளிர் உரிமை துறையின் கீழ் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தமைக்கு 2026 ஆண்டில் சர்வதேச மகளிர் தின விழாவில் அவ்வையார் விருது வழங்கிப்பட உள்ளது. இதற்கு பல்வேறு துறைகளில் சேவையாற்றிய திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் <>awards.tn.gov.i<<>>n இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

திருவாரூர்: ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2.13 லட்சம் திருட்டு

image

வடுவூர் மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர். நலக்கிள்ளி. இவர் தனது வீட்டின் முன் நிறுத்து வைத்த ஸ்கூட்டரில் வங்கியில் நகையை மீட்பதற்காக ரூ.2.13 லட்சம் பணத்தை வைத்துவிட்டு, அவரது மனைவியை அழைப்பதற்காக வீட்டில் உள் சென்று வந்து பார்த்த போது, ஸ்கூட்டரில் இருந்த பணம் திருட்டு போனதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் இதுகுறித்து வடுவூர் காவல் நிலையத்தில் புகாரளித்ததன் பேரில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 22, 2025

திருவாரூர்: பயிர் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

image

திருவாரூர் மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டு தோட்டக்கலை துறையில் பிரதம மந்திரி காப்பீடு திட்டம் அறிவிக்கை செய்யப்பட்ட தோட்டக்கலை பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1088 செலுத்தி 28.2.2026க்குள் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!