News August 25, 2024

திருவாரூரில் 4,054 மாணவர்கள் பயன்

image

திருவாரூர் ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசின் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 4,054 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு போன்ற உயர்கல்வியில் இடைநிற்றல் இன்றி படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News November 23, 2025

திருவாரூர்: வெளுக்க போகும் மழை – எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வாங்க் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.23) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 23, 2025

திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 1194 வாக்குச்சாவடி மையங்களில் கணக்கிட்டு படிவம் நிரப்புவதற்காக உதவி சேவை மையம், இன்று (நவ.23) அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் செயல்பட உள்ளது. இதனிடையில் உதவி சேவை மையத்தில் தவறான தகவல் வழங்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 பிரிவு 31ன் படி, தண்டனைக்குரியது என்பது தெரிவிக்கப்படுகிறது என்று ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

News November 23, 2025

திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட பொதுமக்கள் மழைக்கால அவசர உதவிக்கு, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை உதவிக்கு 1077, 93456440279, 04366-226623, 9043989192, 9488547941, காவல்துறை உதவிக்கு 100, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை உதவிக்கு 9498181220, தீயணைப்பு துறை உதவிக்கு 101 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!