News August 25, 2024

திருவாரூரில் 4,054 மாணவர்கள் பயன்

image

திருவாரூர் ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசின் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 4,054 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு போன்ற உயர்கல்வியில் இடைநிற்றல் இன்றி படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News November 9, 2025

திருவாரூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News November 9, 2025

திருவாரூர்: வேளாண் பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் திட்ட மதிப்பில், ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை 30% மானியம் வழங்கப்படும் என்றும், மாவட்டத்திற்கு மொத்தம் 23 மையங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்த தகவலுக்கு வேளாண் உதவி இயக்குநரை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 9, 2025

திருவாரூர்: ரூ.5 லட்சம் பரிசு வேண்டுமா?

image

திருவாரூர் மாவட்டத்தில், மாநில அளவிலான விளைச்சல் போட்டியில், விவசாயிகள் கலந்து கொண்டு மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறன் விருது வழங்கப்படும். சிறப்புப் பரிசாக ரூ.5 லட்சம் பரிசு மற்றும் ரூ.7,000 மதிப்புள்ள பதக்கமும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!