News August 25, 2024
திருவாரூரில் 4,054 மாணவர்கள் பயன்

திருவாரூர் ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசின் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 4,054 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு போன்ற உயர்கல்வியில் இடைநிற்றல் இன்றி படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 20, 2025
திருவாரூர்: செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவாரூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், இன்று (20.12.2025) பிற்பகல் பணி நிரந்தரம் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் செவிலியர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் ஆதரவு தெரிவித்து, மாநில ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலராபாரதிச் செல்வன் உரையாற்றினார். நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் பால்ராசு, மாநில கொள்கை பரப்பு செயலாளர் சபேசன், மண்டல செயலாளர் பாலு, திருவாரூர் சக்திவேல் கலந்து கொண்டனர்.
News December 20, 2025
திருவாரூர்: 8th போதும்..ரூ.62,000 சம்பளத்தில் வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.19,500 – Rs.62,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 20, 2025
காவல்துறை பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்

திருவாரூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மதுவிலக்கு மற்றும் கஞ்சா குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் வரும் 24-ம் தேதி புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலத்தில் பங்கேற்போர் 4 சக்கர வாகனத்திற்கு ரூ.2000, இருசக்கர வாகனத்திற்கு ரூ.1000 முன்பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


