News April 18, 2025

திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

திருவாரூர் கோட்டத்தில், மாதாந்தர விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் திருவாரூர் வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அதில் திருவாரூர் வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 25, 2025

திருவாரூர்: மழை நீரில் மூழ்கிய 700 ஏக்கர் நெற்பயிர்

image

முத்துப்பேட்டை பகுதியில் தொடர்ச்சியாக கனமழை இடைவிடாது பெய்து வருகிறது. இதில் இன்று காலை வரை விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் வடகாடு கோவிலூர், ஆலங்காடு பகுதியில் சுமார் 700 ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் நீரில் மூழ்கியது. கடன் வாங்கி ஏக்கருக்கு 30ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து சாகுபடி செய்துள்ளதால் கவலையடைந்த விவசாயிகள் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் .

News November 25, 2025

திருவாரூர்: டூவீலர் சக்கரத்தில் சேலை சிக்கி பலி!

image

சித்தன்வாலூரை சேர்ந்தவர் மகேஸ்வரி (42). இவர் சத்துணவு சமையலராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கணவருடன் மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறையில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். அப்பொழுது மகேஸ்வரி சேலை பைக்கின் சக்கரத்தில் சிக்கியதில் கீழே விழுந்ததார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயமடைய ரத்தவெள்ளத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News November 25, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.24) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!