News August 18, 2024

திருவாரூரில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய எஸ்பி

image

திருவாரூரில் ஸ்ரீ ராம் இலக்கியக் கழகம் மற்றும் புதுயுகம் தொலைக்காட்சி இணைந்து நடத்திய திருக்குறள் விழா இன்று (18-08-2024) சாய்ராம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. இவ்விழாவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் கலந்து கொண்டு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Similar News

News August 9, 2025

சிறப்பு வழித்தடங்களுக்கு பேருந்து இயக்கம்

image

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து பல்வேறு பகுதிகள் வழியாக புதிய பேருந்து இயக்கம் செயல்முறைப்படுத்தப்பட்டு உள்ளன. திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் இந்த பேருந்து, கோட்டூர், மன்னார்குடி, வடுவூர் உள்ளிட்ட பல ஊர்களின் வழியாக இயக்கப்படுகின்றன. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள போக்குவரத்து துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 9, 2025

திருவாரூர்: ரூ.1,42,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.10) கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News August 9, 2025

திருவாரூர்: தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இன்று (ஆகஸ்ட் 9) தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமானது மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை நடைபெறவுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!