News August 16, 2024
திருவாரூரில் மகளிர் உரிமை தொகை பெற சிறப்பு முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகையை இதுவரை பெறாதவர்கள் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட்.17 (சனிக்கிழமை) முதல் ஆகஸ்ட்.20 (செவ்வாய்க்கிழமை) வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பெண்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ தெரிவித்துள்ளார்.
Similar News
News January 7, 2026
திருவாரூர்: அப்பா கடையில் திருடிய மகன் கைது

மன்னார்குடி வினோபாஜி தெருவை சேர்ந்தவர் சையது அலி. இவர் அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடையில் கடந்த 4-ந்தேதி இரவு புகுந்த மர்ம நபர்கள் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.60,000 பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து மன்னார்குடி போலீசார் நடத்திய விசாரணையில், சையது அலியின் மகன் முகமது பைசல் (24) பணத்தை திருடியது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
News January 7, 2026
திருவாரூர்: கடலில் தவறி விழுந்து சாவு!

முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை சின்னங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (51). மீனவரான இவர், நேற்று முன்தினம் அதிகாலை சக மீனவர்களுடன் உப்புக்காடு அருகே வலை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்த போது திடீரென படகில் இருந்து தவறி கடலில் விழுந்துள்ளார். இதையடுத்து நீண்ட நேரத்திற்கு பிறகு குமார் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 7, 2026
திருவாரூர்: 132 மாணவர்களுக்கு விருது

திருவாரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் சமூகநீதி கல்லூரி விடுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு, சென்னையில் 2 மாதங்களுக்கு முன்பு கலை, இலக்கியம் & விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 7 கல்லூரிகளைச் சேர்ந்த 421 குழுக்களில் 132 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கான கேடயம் & பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.


