News March 20, 2024

திருவாரூரில் நாளை ஆழித்தேரோட்டம்

image

தியாகராஜ சாமி கோயிலில் நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழா பிப். 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு மிக்க ஆழித்தேரோட்டம் நாளை (மாா்ச்.21) காலை 5.30 மணியளவில் விநாயகா், சுப்ரமணியா் தோ்கள் வடம் பிடிக்கப்பட உள்ளன. தொடர்ந்து காலை 8.50 மணிக்கு மேல் ஆழித்தேர் வடம் பிடிக்க உள்ளது. 

Similar News

News December 22, 2025

திருவாரூர்: இந்த தேதிகளை மறக்காதீர்கள்!

image

திருவாரூர் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, சிறப்பு முகாம் அட்டவணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 28 சனி மற்றும் ஞாயிறு கிழமைகளிலும்; ஜனவரி 3 ஜனவரி 4 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 22, 2025

திருவாரூர்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) உள்ள 764 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-28
3. சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400
4. கல்வித் தகுதி: DEGREE / ITI / DIPLOMA
5. கடைசி தேதி: 01.01.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க….

News December 22, 2025

திருவாரூர்: புதிய காவலர்கள் தங்கும் விடுதி திறப்பு

image

முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்ட 2000 காவலர்கள் தங்கும் விடுதியான காவலர் பாளையம் கட்டிடத்தினை இன்று (டிச.22) காலை 10 மணியளவில் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதே நேரத்தில் முத்துப்பேட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன், எஸ்.பி கருண்கரட் பங்கேற்கிறனர்.

error: Content is protected !!