News March 20, 2024

திருவாரூரில் நாளை ஆழித்தேரோட்டம்

image

தியாகராஜ சாமி கோயிலில் நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழா பிப். 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு மிக்க ஆழித்தேரோட்டம் நாளை (மாா்ச்.21) காலை 5.30 மணியளவில் விநாயகா், சுப்ரமணியா் தோ்கள் வடம் பிடிக்கப்பட உள்ளன. தொடர்ந்து காலை 8.50 மணிக்கு மேல் ஆழித்தேர் வடம் பிடிக்க உள்ளது. 

Similar News

News January 5, 2026

திருவாரூர் மாவட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆதார் மையங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு ஆதார் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூரில் ஜன.11 அன்றும், கூத்தாநல்லூரில் ஜன.18 அன்றும், நீடாமங்கலத்தில் ஜன.25 அன்றும் நடைபெற உள்ளது. ஆதார் அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தம் செய்து பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News January 5, 2026

திருவாரூர்: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

image

கூகுளில் <>mylpg<<>> என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 5, 2026

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

நெகிழி ஒழிப்பை ஊக்குவிக்கும் வகையில் திருவாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் துறை சார்பில் பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்களில் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஜன.15-ம் தேதி கடைசி நாளாகும். மேலும் அறிய https://Tiruvarur.nic.in இனைய தளத்தை பார்க்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!